search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காட்பாடி ராணுவ வீரர் கொலையில் போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேர் கைது

    காட்பாடி ராணுவ வீரர் கொலையில் போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டையை சேர்ந்தவர் சங்கர் மகன் யோகராஜ் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் தீபக் (23), இருவரும் ராணுவ வீரர்கள். சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர்.

    யோகராஜ் சொந்தமாக ஜாப்ராபேட்டையில் வீடு கட்டி வருகிறார். இதற்காக அவரும் தீபக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தனர்.

    யோகராஜின் பிறந்த நாளையொட்டி தீபக் அவரது நண்பர் நேதாஜி மற்றும் யோகராஜ் நேற்று முன்தினம் மது குடித்தனர். கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே கூடுதலாக மது வாங்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் யோகராஜ் குத்திக்கொலை செய்யப்பட்டார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    கழிஞ்ஞர் ரெயில்வேகேட் அருகே 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இரவு நடந்த தகராறு குறித்து கேட்டறிந்தனர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அருகே ஒரு பைக் ஒன்று கிடந்தது. அதனை மீட்டு விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அது கொலையாளிகள் வந்த பைக்காக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அந்த பைக் பழுதடைந்துள்ளது இதனால்தான் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

    பைக் பதிவு எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அந்த பைக்கில் நேற்று முன்தினம் சத்துவாச்சாரி தென்றல் நகரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் அக்‌ஷய்குமார் (வயது 24). வ.உ.சி நகரை சேர்ந்த வினோத் என்கிற வின்ராஜ்(21), விஜய் (26)ஆகியோர் வந்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    நேற்று முன்தினம் இரவு அக்‌ஷய்குமார், வினோத், விஜய் ஆகியோர் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மதுக்கடையில் மது வாங்கி குடித்தனர். 3 பேரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.

    அப்போது இரவு 10.30 மணி ஆகிவிட்டது. மது தீர்ந்து விட்டதால் கூடுதலாக மது குடிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதனால் ஒரே பைக்கில் 3 பேரும் கழிஞ்சூர் ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றனர்.

    அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த நிர்மலா என்ற பெண்ணிடம் மது வாங்கி விட்டு மீண்டும் பைக்கில் புறப்படத் தயாராகினர். அப்போது பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. அதனை ஸ்டார்ட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் ராணுவ வீரர்கள் யோகராஜ், தீபக் தரப்பினர் அங்கு மது வாங்க வந்தனர். அவர்கள் பைக் ஸ்டார்ட் ஆகாமல் நின்று கொண்டிருந்த அக்ஷய்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது அக்‌ஷய்குமார், வினோத், விஜய் ஆகியோர் பேனா கத்தியால் யோகராஜின் கழுத்தில் குத்தினர். தீபக்கிற்கு வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது. நேதாஜிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்ததால் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அக்‌ஷய்குமார் தரப்பினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. அது சம்பந்தமான நினைவும் இல்லை. இந்த தகராறில் யாரும் இறந்திருக்க மாட்டார்கள் என நினைத்தோம்.

    ஆனால் விபரீதமாகி விட்டது என அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×