என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்16 Dec 2020 8:51 AM GMT (Updated: 16 Dec 2020 8:51 AM GMT)
விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு இந்த அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. விளையாட்டுத்துறை மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்தார்.
விளையாட்டில் மாணவ-மாணவிகளை சிறுவயதிலிருந்தே ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவைப்படும் பட்சத்தில் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம்.
பாடத்திட்டங்கள் குறைப்பதை பொறுத்தவரை 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் உடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவு அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு இந்த அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. விளையாட்டுத்துறை மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்தார்.
விளையாட்டில் மாணவ-மாணவிகளை சிறுவயதிலிருந்தே ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவைப்படும் பட்சத்தில் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம்.
பாடத்திட்டங்கள் குறைப்பதை பொறுத்தவரை 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் உடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவு அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X