என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணமகனை பிடிக்காததால் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினேன் - இளம்பெண்ணின் பரபரப்பு ஆடியோ
Byமாலை மலர்3 Nov 2020 1:21 AM GMT (Updated: 3 Nov 2020 1:21 AM GMT)
மணமகனை பிடிக்காததால் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினேன் என்று மஞ்சூர் அருகே திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள மட்டக்கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஊட்டி தூனேரியை சேர்ந்த இளம பெண் ஒருவருக்கும் கடந்த வாரம் மணமகன் இல்லத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மணமக்களின் குல வழக்கப்படி தாலி கட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என 3 முறை மணமகளிடம் மணமகன் கேட்க வேண்டும். அப்படி 2 முறை மணமகன் கேட்டபோது மணமகள் பதில் ஏதும் கூறவில்லை. 3-வது முறை அவ்வாறு கேட்டபடி மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றார்.
அப்போது திடீரென்று அந்த மணப்பெண் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்ததுடன், திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவர் தனக்காக காத்து இருப்பதால் அவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். இதனால் திருமணம் நின்றது.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விழாவில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது வைரலாக பரவி வருகிறது. அத்துடன் அந்த மணப்பெண் சென்னையில் உள்ள தனது காதலரை பார்க்க சென்றதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதுவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு சென்னையில் காதலர் யாரும் இல்லை. நான் காதலனை தேடி சென்னைக்கு செல்லவும் இல்லை. தற்போது நான் எனது சொந்த ஊரில் பெற்றோருடன்தான் இருக்கிறேன். மணமகனை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்த வேறு வழியின்றி அவ்வாறு கூறினேன். என்னை பற்றி யாரும் விமர்சிக்கவோ இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே திருமணத்தை நிறுத்திய இளம்பெண், தற்போது திருமணத்தை நிறுத்தியது ஏன் என்பது குறித்து ஆடியோ வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள மட்டக்கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஊட்டி தூனேரியை சேர்ந்த இளம பெண் ஒருவருக்கும் கடந்த வாரம் மணமகன் இல்லத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மணமக்களின் குல வழக்கப்படி தாலி கட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என 3 முறை மணமகளிடம் மணமகன் கேட்க வேண்டும். அப்படி 2 முறை மணமகன் கேட்டபோது மணமகள் பதில் ஏதும் கூறவில்லை. 3-வது முறை அவ்வாறு கேட்டபடி மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றார்.
அப்போது திடீரென்று அந்த மணப்பெண் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்ததுடன், திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவர் தனக்காக காத்து இருப்பதால் அவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். இதனால் திருமணம் நின்றது.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விழாவில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது வைரலாக பரவி வருகிறது. அத்துடன் அந்த மணப்பெண் சென்னையில் உள்ள தனது காதலரை பார்க்க சென்றதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதுவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு சென்னையில் காதலர் யாரும் இல்லை. நான் காதலனை தேடி சென்னைக்கு செல்லவும் இல்லை. தற்போது நான் எனது சொந்த ஊரில் பெற்றோருடன்தான் இருக்கிறேன். மணமகனை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்த வேறு வழியின்றி அவ்வாறு கூறினேன். என்னை பற்றி யாரும் விமர்சிக்கவோ இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே திருமணத்தை நிறுத்திய இளம்பெண், தற்போது திருமணத்தை நிறுத்தியது ஏன் என்பது குறித்து ஆடியோ வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X