search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி முதல்மந்திரி நாராயணசாமி
    X
    புதுச்சேரி முதல்மந்திரி நாராயணசாமி

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் - புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேச்சு

    ராகுல்காந்தி பிரதமராகி அவரது தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:
     
    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ’நீட்’ தேர்வு நாடு முழுவதும் இன்று பெற்றது. நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு தேர்வு நடைபெற்றது.

    இதற்கிடையில், ’நீட்’ தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலை சம்பங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த நிகழ்வை தொடர்ந்து ’நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

    நடிகர் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபல நபர்கள் ’நீட்’ தேர்வுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு ’நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி மாநில முதல்மந்திரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ராகுல் காந்தி பிரதமராகி அவரது தலைமையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ’நீட்’ தேர்வை ரத்து செய்வோம்’ என்றார்.

    Next Story
    ×