என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லிக்குப்பத்தில் போலீசை தாக்கி கொலை மிரட்டல்- 3 பேர் கைது
Byமாலை மலர்19 May 2020 11:24 AM GMT (Updated: 19 May 2020 11:24 AM GMT)
நெல்லிக்குப்பத்தில் பால் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த போலீசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜீ (வயது 32). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் காவலராக இருந்து வருகிறார்.
இவர் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபரில் ஒரு வாலிபர் காவலர் ராஜூவை இடித்துக் கொண்டு நின்றார். இதனை தட்டிக்கேட்ட காவலர் ராஜுவை 3 வாலிபர்கள் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த ராஜீ கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் காவலர் ராஜீ கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் அண்ணா நகர் சேர்ந்தவர்கள் ஜெய சீலன் (வயது 29), சேரன் (வயது 24), ராஜ்குமார் (வயது 28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X