என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தாலுகா அலுவலகம் முன்பு நல்லடை ஆதிதிராவிடர் பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று சீர்காழி ஆதிதிராவிடர் தாசில்தார் ராணியிடம் அதே பள்ளி சேர்ந்த ஆசிரியர் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் புகார் அளித்த ஆசிரியரை பணி இடமாற்றம் உத்தரவு வந்தது. இதுகுறித்து வக்கீல் சங்கமித்திரன் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் உரிய விசாரணை செய்ய வில்லை. இதனால் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் அமைப்பாளர் அன்பு செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நாகை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் செயலர் ரவிச்சந்திரன், கடலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார், மயிலாடுதுறை முன்னாள் நகர செயலர் பிரபா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணமூர்த்தி, மக்கள் பாதுகாப்பு அமைப்பு சுகந்தன், நாம மக்கள் இயக்கம் செந்தில், விடுதலை சிறுத்தை மாநில பொறுப்பாளர் சிறுபான்மை பிரிவு ரியாஸ்ஹான் உள்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






