என் மலர்
செய்திகள்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.
பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்- வைகோ
காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல் என்று வைகோ கூறியுள்ளார்.
நெய்வேலி:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெய்வேலி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 324 கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நீட் தேர்வு வரவே வராது என்று கூறிவிட்டு, மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து இன்று தமிழக மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு துரோகம் இழைத்து விட்டது.மேகதாது அணை கட்டவும், நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்காகவே மத்திய- மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது.
ஓ.என்.சி.சி. நிறுவனத்துடனும், வேதாந்தா குடும்பத்துடனும் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகள் தயாரா? ரூ.50 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு பெட்ரோல் கெமிக்கல் திட்டம் அமைக்க முயற்சித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தாலும் தஞ்சை தரணி பாலைவனமாகும். இந்த திட்டம் தமிழக மக்களை அழிக்கக்கூடியதாக இருக்கும். எனவே இதனை எதிர்க்க ஒவ்வொரு தமிழனும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், நகர செயலாளருமான பிச்சை, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பாபு, கோவிந்தராஜ், ஜெய்சங்கர், தொழிற் சங்க நிர்வாகிகள் மத்தியாஸ், மனோகரன் ஆகியோர் இருந்தனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெய்வேலி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து உள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 324 கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 57,500 ஏக்கர் நிலத்தை 2017-ல் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனை ரத்து செய்ய மத்திய-மாநில அரசு தயாரா?

நீட் தேர்வு வரவே வராது என்று கூறிவிட்டு, மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து இன்று தமிழக மாணவர்களுக்கு அ.தி.மு.க. அரசு துரோகம் இழைத்து விட்டது.மேகதாது அணை கட்டவும், நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்காகவே மத்திய- மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது.
ஓ.என்.சி.சி. நிறுவனத்துடனும், வேதாந்தா குடும்பத்துடனும் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகள் தயாரா? ரூ.50 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு பெட்ரோல் கெமிக்கல் திட்டம் அமைக்க முயற்சித்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டத்தாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தாலும் தஞ்சை தரணி பாலைவனமாகும். இந்த திட்டம் தமிழக மக்களை அழிக்கக்கூடியதாக இருக்கும். எனவே இதனை எதிர்க்க ஒவ்வொரு தமிழனும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் ராமலிங்கம், சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், நகர செயலாளருமான பிச்சை, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பாபு, கோவிந்தராஜ், ஜெய்சங்கர், தொழிற் சங்க நிர்வாகிகள் மத்தியாஸ், மனோகரன் ஆகியோர் இருந்தனர்.
Next Story






