search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான  அசாம் வாலிபர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதான அசாம் வாலிபர்களை படத்தில் காணலாம்.

    ரெயிலில் பயணிகளிடம் நகை பணம் திருடிய அசாம் வாலிபர்கள் 4 பேர் கைது

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் பயணிகளிடம் நகை திருடிய அசாம் வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 2–வது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த 4 பேரை விசாரணை செய்ததில், முன்னுக்கு முரணாக பதில் கூறினர்.

    பின்னர் அவர்கள் 4 பேரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அசாம் மாநிலம் கம்தூர் பகுதியை சேர்ந்த தீப்ஜோதிமேதி (வயது 21), சஞ்சுவ்ராவ் (26), அமர்கோட்டாபோரா (23), கிரேசர்குகே (23) என தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் சபரி எக்ஸ்பிரஸ், எஸ்வந்தபூர் எக்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரெயில்களில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த கலிமுல்லா (52), ஆந்திர மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்த நிஷா நாயர் (35), பெங்களூருவை சேர்ந்த கீதா (54) கோவையை சேர்ந்த மகேஸ்வரி (29), ரோகிதபஷ்மா (40) சென்னையை சேர்ந்த மணி (70) உள்ளிட்ட 7 ரெயில் பயணிகள் ஜன்னலோரம் தூங்கி கொண்டிருந்த போது, 24 பவுன் தங்க நகைகள், செல்போன், மடிக்கணினி, பணம், ஏ.டி.எம். அட்டை உள்ளிட்ட பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து 11 பவுன் நகைகள், 9 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×