என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு வாபஸ்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் கடந்த 22.8.2012-ம் ஆண்டு தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க.பொது செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி மரியாதை குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தமிழக அரசு சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் விஜயகாந்த் மீது சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக சென்னை ஐகோர்ட்டில் நடத்த வேண்டும் என விஜயகாந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஊட்டி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக சென்னை ஐகோர்ட்டில் அரசு தெரிவித்தது.
அதன்படி ஊட்டி கோர்ட்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக மாவட்ட நீதிபதி வடமலையிடம், அரசு வக்கீல் பாலநந்தகுமார் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்