search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.ராமகிருஷ்ணன்
    X
    ஜி.ராமகிருஷ்ணன்

    தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

    இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வுகாண வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்தினால் அது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும். ஆள்கடத்தலுக்கு துணைபோகும்.

    கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு தமிழக அரசு மனைபட்டா வழங்க வலியுறுத்தி டிசம்பர் 26-ம் தேதி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்.

    நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதை ஆட்சேபிக்க முடியாது. அது அவர்களின் உரிமை. தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறுவது தமிழகத்தில் உள்ள அரசியலை அவர்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. அதே சமயம் தமிழகத்தில் ஆளுமை வாய்ந்த தலைவர்கள் இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கவில்லை. ஆளுமை என்பது முக்கியமல்ல எதிர்க் கட்சியும் ஆளும் கட்சியும் எத்தகைய கொள்கைகளை கடைபிடிக்கின்றன என்பது தான் முக்கியம்.

    கோத்தபய ராஜபக்சே

    இலங்கை அதிபர் தேர்தலில் வலதுசாரி ஆதரவுடன் பிரதமராகி உள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் சுயாட்சி வழங்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசு, தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் மத்திய, மாநில அரசுகள் பேசி சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

    10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை வரவேற்கிறோம்.

    மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பியும் டெல்டா பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாத காரணத்தால் கடலில் வீணாக போய் கலக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×