search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி - முக ஸ்டாலின்
    X
    கே.எஸ்.அழகிரி - முக ஸ்டாலின்

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் - கே.எஸ்.அழகிரி

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-

    அ.தி.மு.க. கட்சியில் தற்போது கட்டுப்பாடு இல்லை. மாவட்ட அளவில் உள்ள மேலிட தலைவர்களை தலைமையால் கண்டிக்க முடியவில்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ரூ.660 கோடி லாபம் ஈட்டி உள்ளது.

    பொதுதுறை நிறுவனங்கள் தனியாருக்கு இணையாக லாபம் ஈட்ட முடியவில்லை. கடலுர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்குறைய முக்கிய காரணம் நெய்வேலி என்.எல்.சி, நிறுவனம் ஆகும். இதற்குபோதுமான அளவுக்கு திட்டம் எதுவும் என்.எல்.சி.யில் இல்லை. ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செய்யும் அளவு இங்கு எதுவும் செய்யப்படவில்லை.

    கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு அதிக முக்கியதுவம் தர வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கூடஎன்.எல்.சி.யில் ஓப்பந்ததொழிலாளர் பிரச்சினை நிறைவேற்ற படவில்லை. தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க பட வேண்டும்.

    தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கடலூர் சிப்காட்டில் செயல்பட்டு வந்த பல தொழிற்சாலைகள் காணாமல் போய்விட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே இல்லை. விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படவில்லை. கூட்டுறவுதுறை பரிதாபமான தோல்வியை சந்தித்துள்ளது. உரத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளது. 4.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    பல தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூரில்பஞ்சாலைகள் 40 சதவீதம் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. போதுமான நிலக்கரி இருந்தும் இறக்குமதி செய்வதால் அன்னிய செலாவணி இல்லை. தற்போது கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக அளவு மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மணல், ஜல்லி, சிமெண்ட் விலை ஏற்றத்தால் பணத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

    ஆயுள் காப்பீட்டு கழகம் ஆயுள் முடிந்துவிடும் போல் உள்ளது. அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×