search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    வேதாரண்யம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

    வேதாரண்யம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கத்திரிபுலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது37) விவசாயி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சூர்யா, ராஜா, தேவேந்திரன் ஆகிய 3 பேரும் மது குடித்துவிட்டு பாட்டில்களை வழியில் போட்டு உடைத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ராமச்சந்திரனை அவர்கள் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ராமச்சந்திரன் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் கரியாபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை தாக்கிய 3 பேரையும் கைது செய்தார்.

    Next Story
    ×