என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சோனியா-ராகுல் பற்றி சர்ச்சை கருத்து: அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மனு
ஈரோடு:
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையிலான காங். நிர்வாகிகள் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி. சக்திகணேசனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவரும், 22 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருபவருமான, சோனியா காந்தி பற்றியும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் ராகுல் காந்தி பற்றியும் அவர்கள் குடி உரிமை பற்றியும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 18-ந் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சரின் பேட்டியானது காங்கிரஸ் கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்கள் கொதிப்படைய செய்துள்ளது.
எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். முன்னாள் தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு பெரியசாமி, மண்டல தலைவர் திருச்செல்வம், எஸ்.டி பிரிவு சின்னசாமி, முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் பாபு என்கிற வெங்கடாச்சலம் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கனகராஜ் வின்சென்ட் கண்ணப்பன் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்சா உள்பட பல்வேறு நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்