search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    தமிழக அரசு கடனில் தத்தளிக்கிறது- கே.எஸ்.அழகிரி

    தமிழக அரசு கடனில் தத்தளிப்பதாக வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் திவாலான அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது. ரூ.4 லட்சம் கோடி கடன் உள்ளது. இவ்வளவு கடன் உள்ள அரசாங்கத்தால் எந்த சமூகநலத்திட்டத்தையும், பொதுத்திட்டத்தையும், குடிநீர் பிரச்சனை திட்டத்தையும், சாலை வசதி திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால் வருமானத்தை மீறிய கடன்.

    எனவே அந்த அரசாங்கத்தை நம்பி வேறு யாரும் உதவி செய்ய வரமாட்டார்கள். கடனில் இந்த அரசு இயங்குகிறது. ஆனால் இதுகுறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலங்க மாட்டார். ஏனென்றால் கடன் அரசாங்கத்துக்கு தான் உள்ளதே தவிர, ஆளுகிறவர்களுக்கு அல்ல. எனவே இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டம் நீட் தேர்வு போன்றவை சமூக நீதி பிரச்சனையாகும். நீட்தேர்வில் வசதியானவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே வெற்றிபெறும் சூழ்நிலை காணப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

    நவோதயா பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் குறைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதித்து தமிழகத்தில் அப்பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து தமிழகத்தில் முடிவு செய்யப்படும். வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்வார்கள்.

    பிரதமர் வேட்பாளராக கருதிய ராகுல் காந்தி தற்போது காணாமல் போய்விட்டார் என்று ஜி.கே.வாசன் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு பதவிகளை அனுபவித்தவர் ஜி.கே.வாசன். அவர் மாநில தலைவராக இருந்தபோது காங்கிரஸ் வளர்ச்சிக்காக உழைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினை விமர்சிக்க ஜி.கே.வாசனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×