என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி அருகே செட்டிநாட்டில் வாகன விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்10 July 2019 9:24 AM GMT (Updated: 10 July 2019 9:24 AM GMT)
காரைக்குடி அருகே வாகனம் மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
காரைக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள குறுந்தாடி பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சிவா(வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி-ராமேசுவரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோரம் மொபட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சிவா ரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவா மீது ஏறிவிட்டு சென்றது. இதில் உடல்நசுங்கி சிவா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X