என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்து விட்டனர் - ரத்தினசபாபதி
Byமாலை மலர்2 July 2019 2:03 PM GMT (Updated: 2 July 2019 2:03 PM GMT)
சென்னையில் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி, தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனேயே அவரிடம் இருந்து விலகிவிட்டேன் என்று கூறினார்.
சென்னை:
தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தின சபாபதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனையடுத்து, ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனேயே அவரிடம் இருந்து விலகிவிட்டேன். அ.ம.மு.க. பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்து.விட்டனர்.
பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் விரைவில் அ.தி.மு.க.விற்கு வருவார்கள். மீண்டும் என்னை அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்தது அமைச்சர் விஜயபாஸ்கர் தான்.
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம், பிரிந்து சென்றவர்கள் திரும்ப வர வேண்டும். அதிமுகவை வலிமையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். மீண்டும் எம்எல்ஏவாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X