என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடலூர் அருகே சொத்து தகராறில் பெண் படுகொலை: தந்தை-மகன் கைது
Byமாலை மலர்20 Jun 2019 4:53 PM GMT (Updated: 20 Jun 2019 4:53 PM GMT)
வடலூர் அருகே சொத்து தகராறு காரணமாக கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
வடலூர்:
வடலூர் அருகே சொத்து தகராறு காரணமாக கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தாண்டவராயன். இவருக்கு ரவிச்சந்திரன் (வயது 62), ராமலிங்கம்(58) என்ற 2 மகன்களும், செல்வி(50) என்ற மகளும் உள்ளனர். ரவிச்சந்திரனும், ராமலிங்கமும் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளியான செல்விக்கு திருமணமாகவில்லை. அவர் ராமலிங்கம் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாண்டவராயன் இறந்து விட்டார்.
இதையடுத்து ரவிச்சந்திரனுக்கும், ராமலிங்கத்துக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது ராமலிங்கம், செல்விக்கும் சொத்தில் பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதில் விருப்பம் இல்லாத ரவிச்சந்திரன், செல்வி மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ரவிச்சந்திரனும், அவரது மகன் செந்தில்குமாரும் (28), ராமலிங்கம் வீட்டின் முன்பு நின்று ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
இந்த சத்தம் கேட்ட செல்வி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். அப்போது ரவிச்சந்திரனும், செந்தில்குமாரும் உன்னால் தான் சொத்தை பிரிக்க முடியவில்லை என கூறி செல்வியை தாக்கியுள்ளனர். பின்னர் 2 பேரும் அவரை கல்லால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான செல்வியின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சொத்து தகராறில் பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X