search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வங்கி கடன் செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை
    X

    மதுரையில் வங்கி கடன் செலுத்த முடியாததால் வியாபாரி தற்கொலை

    மதுரையில் வங்கி கடன் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் அகிம்சா நகரைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (வயது 38). இவர் அதே பகுதியில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல தனியார் வங்கியில் சுந்தரமகாலிங்கம் கடன் வாங்கினார்.

    வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மாதத் தவணையை சரிவர செலுத்த முடியவில்லை. இதனால் வங்கியில் இருந்து கடனை செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இதனால் மன வேதனை அடைந்த அவர், சம்பவத்தன்று வீடடில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் சுந்தரமகா லிங்கத்தை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×