search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்து வைக்காத பெற்றோரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற வாலிபர்
    X

    திருமணம் செய்து வைக்காத பெற்றோரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற வாலிபர்

    திருமணம் செய்து வைக்காத பெற்றோரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #VelloreCollectorOffice
    வேலூர்:

    வேலூர் அடுத்த அன்பூண்டியை சேர்ந்தவர் கணபதி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளையமகன் ஜானகிராமன் (வயது 28). இவர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க கோரி வற்புறுத்தி வந்து உள்ளார்.

    மேலும் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இதனால் பெற்றோருக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் ஜனகிராமன் தனது பெற்றோர் மீது புகார் அளித்து உள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஜானகிராமன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜானகிராமன் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். #VelloreCollectorOffice
    Next Story
    ×