என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி ஏ.கே.அந்தோணி பேசுவார்- திருநாவுக்கரசர் பேட்டி
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்க வருகிற 16-ந்தேதி சென்னை வருகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு அவர் டெல்லி செல்கிறார்.
இந்த நிகழ்ச்சி தமிழகத்துக்கும் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். மோடி அரசை அகற்றுவதற்கும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ராகுல்பிரதமராக வருவார்.
மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் பேசப்படும். தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர்கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார்கள். ரஜினி அரசியல் கட்சி பணியைத் தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளார். கமலும் அறிவித்துள்ளார். எல்லோரும் வரட்டும்.
மு.க.ஸ்டாலின் சோனியாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. மோடி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தலில் 16 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டும் தான் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மீதி தொகுதிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மோடியை வீழ்த்த தகுதியான தலைவர் ராகுல் காந்தி தான் என்பது தான் பரவலான கணிப்பு. வருகிற தேர்தல் அதை நிரூபிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் , அணி தலைவர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தணிகாசலம், தாமோதரன், மெய்யப்பன், கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி.விசுவநாதன், இளைஞர் அணி தலைவர் அசன் ஆரூண், மகளிர் அணி தலைவி. ஜான்சிராணி மீனவர் அணி தலைவர் கஜநாதன், சிறுபான்மை பிரிவு அஸ்லம் பாஷா, பவன் குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ். திரவியம், ரூபி மனோகரன், சிதம்பரம், ராஜேஷ்குமார், சிவராஜசேகர், எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #AKAntony #congress #mkstalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்