search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண மதிப்பு இழப்பு: தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்- முக ஸ்டாலின் கருத்து
    X

    பண மதிப்பு இழப்பு: தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்- முக ஸ்டாலின் கருத்து

    நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Demonetisation
    சென்னை:

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி உயர் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

    பண மதிப்பு இழப்பின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டு மக்கள் அனைவரையும் நடுத்தெருவுக்கு தள்ளிய பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று.


    வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதோடு, சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது. நாட்டின் அழிவுக்கு வழி வகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #Demonetisation
    Next Story
    ×