search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி., எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு
    X

    முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி., எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

    பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர், அமைச்சர்கள் பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி, எம்.எல்.ஏ கார்த்திக் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DMK #ADMK
    கோவை:

    கடந்த 26-ம் தேதி கோயம்பத்தூர் மாவட்டம் பேரூரில் நடந்த திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு பேசினார். மேலும், அக்கட்சி எம்.எல்.ஏ கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு தமிழக அரசை விமர்சித்து பேசினர்.

    இந்நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆர்.எஸ் பாரதி, கார்த்திக், ராமச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது பேரூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×