search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக-வுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சி- தம்பிதுரை
    X

    பாஜக-வுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சி- தம்பிதுரை

    பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க. பல கட்ட முயற்சிகளை செய்து வருவதாக அரவக்குறிச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #DMK #BJP
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான மு. தம்பித்துரை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் இன்று மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றார்.

    அப்போது அரவக்குறிச்சி கொத்தாம்பாளையம் பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கு மொழியில் குறைகளை கேட்டார். பின்னர் பள்ளப்பட்டி பகுதியில் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் மாதிரி கிராமம் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதனால் அந்த திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. கரூரில் சாயப்பூங்கா திட்டத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களையும் சமாதானம் செய்து விரைவில் அந்த திட்டம் செயல்படும் சூழல் ஏற்படுத்தப்படும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் மனு அளித்துள்ளது. இறுதி முடிவினை கவர்னர் தான் எடுக்க வேண்டும்.



    தி.மு.க. 1999-ஆம் ஆண்டு முதல் 2004 -ம் ஆண்டு வரை பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்துள்ளது. அந்த உறவினை புதுப்பிப்பதாக அவர்களின் சமீபத்திய நடவடிக்கை அமைந்துள்ளன. தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோது பிரதமர் மோடி அவரை சந்தித்தார். அதில் இருந்து உறவு தொடர்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க தி.மு.க. பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறது.

    தமிழகத்தில் காவித் தன்மையை கொண்டு வர முடியாததால் திராவிட கட்சிகள் மீது பா.ஜ.க. பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #DMK #BJP
    Next Story
    ×