search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா? - ரஜினிகாந்த் கேள்வி
    X

    கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா? - ரஜினிகாந்த் கேள்வி

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறுதிச்சடங்கில் இந்தியாவின் அனைத்து தலைவர்களும் வந்த நிலையில், தமிழக முதல்வர் வந்திருக்க வேண்டாமா? என நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். #Rajinikanth #Karunanidhi
    சென்னை:

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதவது:-

    திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. இலக்கியம், சினிமா என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். பழையவராகவே, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்.

    பல வஞ்சனைகளை தாண்டி அரசியலில் ஜொலித்த கருணாநிதியால் அரசியலுக்கு வந்தோர் லட்சம் பேர் உள்ளனர். அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். அதிமுக உருவானதற்கு காரணம் கருணாநிதிதான்.

    தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் மு.க.ஸ்டாலின் யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். 

    இந்த இடத்தில் இதை சொல்லியே ஆக வேண்டும். கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ராகுல் காந்தி, பல மாநில முதல்வர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் முதலமைச்சர் வர வேண்டாமா?. அமைச்சர்கள் வந்திருக்க வேண்டாமா?. 

    என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
    Next Story
    ×