search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பா.ஜ.க. தான் - ப.சிதம்பரம் சாடல்
    X

    துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பா.ஜ.க. தான் - ப.சிதம்பரம் சாடல்

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பா.ஜ.க.தான் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #SterliteProtest #ChidambaramAttackBJP
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காவல்துறையின் இந்த அடக்குமுறைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுத்ததால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பா.ஜ.க. கடுமையாக சாடியுள்ளார்.

    தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா? என சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறியுள்ளார். #SterliteProtest #ThoothukudiFiring #ChidambaramAttackBJP
    Next Story
    ×