என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே சகோதரர்கள் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்12 May 2018 11:24 AM GMT (Updated: 12 May 2018 11:24 AM GMT)
மார்த்தாண்டம் அருகே சகோதரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு, தெற்ற விளையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அசோக்குமாரின் மனைவி சுமிதா. இவர்களின் வீடு அருகே அசோக்குமாரின் சகோதரர் அஜித்குமார் வீடும் உள்ளது. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அசோக்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள இன்னொரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இன்று காலை அசோக் குமாரின் மனைவி சுமிதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் வீடுமுழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.39 ஆயிரமும் கொள்ளை போயிருந்தது.
இதுபோல அசோக்குமாரின் சகோதரர் அஜித் குமார் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு அங்கிருந்த 25 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 2 வீடுகளிலும் மொத்தம் 55 பவுன் நகையும், ரூ.59 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடப்பட்டு இருந்தது.
இதுபோல மேல்புறம் பகுதியில் ஜெரால்டு என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி அவர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு, தெற்ற விளையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 36). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அசோக்குமாரின் மனைவி சுமிதா. இவர்களின் வீடு அருகே அசோக்குமாரின் சகோதரர் அஜித்குமார் வீடும் உள்ளது. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அசோக்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூரில் உள்ள இன்னொரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இன்று காலை அசோக் குமாரின் மனைவி சுமிதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் வீடுமுழுவதும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.39 ஆயிரமும் கொள்ளை போயிருந்தது.
இதுபோல அசோக்குமாரின் சகோதரர் அஜித் குமார் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு அங்கிருந்த 25 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 2 வீடுகளிலும் மொத்தம் 55 பவுன் நகையும், ரூ.59 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடப்பட்டு இருந்தது.
இதுபோல மேல்புறம் பகுதியில் ஜெரால்டு என்பவர் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி அவர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X