என் மலர்
செய்திகள்

மத்திய அரசின் அநீதியை மாநில அரசு மூடி மறைக்க முடியாது- வைகோ
மத்திய அரசின் அநீதியை தமிழக அரசு மூடி மறைக்க முடியாது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மயிலாடுதுறை:
ம.தி.மு.க. 25-ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை வண்டிபேட்டை பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கட்சிக் கொடியேற்றி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு முறையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு எழுந்த போதே கடுமையான அழுத்தம் கொடுத்து நீட்தேர்வை தடுத்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமை. வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போடப்பட்டதை கண்டித்து, மத்திய அரசிடம் கடுமையாக போராடி தமிழகத்தில் தேர்வு மையத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி கேரளாவில் மாரடைப்பால் இறந்துள்ளார். அந்த மாணவர் நீட்தேர்வில் வெற்றிபெறாவிட்டாலும் தமிழக அரசால் டாக்டராக்க முடியும். மத்திய அரசின் அநீதியை தமிழக அரசு மூடி மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட செயலாளர் மோகன், நகர செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ம.தி.மு.க. 25-ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை வண்டிபேட்டை பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கட்சிக் கொடியேற்றி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு முறையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு எழுந்த போதே கடுமையான அழுத்தம் கொடுத்து நீட்தேர்வை தடுத்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமை. வெளிமாநிலங்களில் தேர்வு மையம் போடப்பட்டதை கண்டித்து, மத்திய அரசிடம் கடுமையாக போராடி தமிழகத்தில் தேர்வு மையத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி கேரளாவில் மாரடைப்பால் இறந்துள்ளார். அந்த மாணவர் நீட்தேர்வில் வெற்றிபெறாவிட்டாலும் தமிழக அரசால் டாக்டராக்க முடியும். மத்திய அரசின் அநீதியை தமிழக அரசு மூடி மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட செயலாளர் மோகன், நகர செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






