என் மலர்
செய்திகள்

தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
தேவகோட்டை அருகே உள்ள உருவாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சொர்ணமணி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
திருவேகம்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #Tamilnews
தேவகோட்டை அருகே உள்ள உருவாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சொர்ணமணி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷ்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
திருவேகம்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவேகம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். #Tamilnews
Next Story






