என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
    X

    திருப்பத்தூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

    திருப்பத்தூரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ரதி தேவி (வயது 27). இவருக்கும், கோவையைச் சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் ரதி தேவி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், குழந்தை இல்லாததால் எனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாகவும், இதற்கு உடந்தையாக அவரது தாயார் பாப்பா இருக்கிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தி வடிவேல், அவரது தாயார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #tamilnews
    Next Story
    ×