என் மலர்
செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே பிளஸ்-2 மாணவி மாயம்
காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி வீடு திரும்பாதது குறித்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் வினோதினி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று வினோதினி பள்ளிக்கு சென்றுவருவதாக கூறி சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story






