என் மலர்
செய்திகள்

கடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
கடலூர்:
கடலூர் துறைமுகம் அருகே உள்ள அக்கரைக் கோரியை சேர்ந்தவர் பத்மாவதி(வயது 51). இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் அவர் கடையில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவா, ஜலேந்திரன், சுரேஷ், முத்து ஆகியோர் கடையின் அருகே மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் மது குடித்தவர்களை விரட்டினர்.
இதுபற்றி போலீசுக்கு பத்மாவதிதான் தகவல் தெரிவித்துள்ளார் என்று சிவா உள்பட 4 பேரும் கருதினர். பின்னர் அவர்கள் பெட்டிக்கடைக்கு சென்று அங்கிருந்த பத்மாவதிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டனர்.
இதுகுறித்து வீட்டுக்கு சென்ற பத்மாவதி தனது மகன் பிரகாசிடம் கூறினார். உடனே பிரகாஷ் தனது நண்பர்கள் யுவராஜ், லோகு ஆகியோருடன் சிவாவிடம் சென்று என் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாய்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.
பின்னர் அவர்கள் சிவாவை தாக்கி கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சிவா கடலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவாவின் தந்தை பாஸ்கரன் கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பிரகாஷ், யுவராஜ், லோகு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பிராகஷ் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் பத்மாவதியும் சிவா உள்பட 4 பேர் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் சிவா, ஜலேந்திரன், சுரேஷ், முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






