என் மலர்
செய்திகள்

குடிபோதையில் நண்பனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
சீனிவாசபுரம் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பவானி:
பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் அன்பு (வயது 30). அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் கார்த்தி,
சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சசி (31). இவர்கள் மூவரும் நண்பவர்கள் இவர்கள் மூவருக்கும் குடி பழக்கம் இருந்துள்ளது. கடந்த 2015 பிப்ரவரி 8-ம் தேதி இரவு 10 மணியளவில் குடிபோதையில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அது அவர்களுக்கு கொஞ்ச நேரம் மட்டுமே நீடித்தது.
திடீரென அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் ஆரம்பித்து பிறகு அது கொலையில் முடிந்தது. கார்த்தியை இருவரும் அடித்து உதைத்தனர். கார்த்தியை அன்புராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு, சசி இருவருரையும் கைது செய்தனர்.
அப்போதைய இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரனை செய்ததில் அவர்கள் மூட்டை தூக்கும் குத்தூசியால் குத்தி கார்த்தியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் பவானி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு விசாரனை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நான்காவது கூடுதல் நீதிபதி ஆனந்த் கொலையாளி அன்புக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து கொலையாளி அன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சசி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் அன்பு (வயது 30). அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் கார்த்தி,
சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சசி (31). இவர்கள் மூவரும் நண்பவர்கள் இவர்கள் மூவருக்கும் குடி பழக்கம் இருந்துள்ளது. கடந்த 2015 பிப்ரவரி 8-ம் தேதி இரவு 10 மணியளவில் குடிபோதையில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அது அவர்களுக்கு கொஞ்ச நேரம் மட்டுமே நீடித்தது.
திடீரென அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டு அடிதடியில் ஆரம்பித்து பிறகு அது கொலையில் முடிந்தது. கார்த்தியை இருவரும் அடித்து உதைத்தனர். கார்த்தியை அன்புராஜ் கத்தியால் குத்தினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு, சசி இருவருரையும் கைது செய்தனர்.
அப்போதைய இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரனை செய்ததில் அவர்கள் மூட்டை தூக்கும் குத்தூசியால் குத்தி கார்த்தியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் பவானி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு விசாரனை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நான்காவது கூடுதல் நீதிபதி ஆனந்த் கொலையாளி அன்புக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து கொலையாளி அன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சசி என்பவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story






