என் மலர்
செய்திகள்

போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் வாலிபர் கைது
நாகை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி:
புத்தாண்டு பிறப்பையொட்டி நாகை மாவட்டம் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலு தேவி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அவர்கள் திருவெண்காடு பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார். அவர் சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி கொண்டு இருந்தார். அவர் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் போலீஸ்காரர் அன்பரசன் அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரை பணிசெய்ய விடாமல் தடுத்த அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரத்தை சேர்ந்த பாக்கிய சந்திரன் (வயது 24) என்று தெரியவந்தது.
போலீஸ்காரரை வாலிபர் தாக்கி மிரட்டிய சம்பவம் திருவெண் காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புத்தாண்டு பிறப்பையொட்டி நாகை மாவட்டம் திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலு தேவி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அவர்கள் திருவெண்காடு பகுதியில் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார். அவர் சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி கொண்டு இருந்தார். அவர் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் போலீஸ்காரர் அன்பரசன் அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் வாக்குவாதம் செய்து தாக்குதலில் ஈடுபட்டார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரை பணிசெய்ய விடாமல் தடுத்த அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் சீர்காழியை அடுத்த கீழ சட்டநாதபுரத்தை சேர்ந்த பாக்கிய சந்திரன் (வயது 24) என்று தெரியவந்தது.
போலீஸ்காரரை வாலிபர் தாக்கி மிரட்டிய சம்பவம் திருவெண் காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






