என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து
    X

    சிவகங்கையில் தண்ணீர் பாய்ச்சும் தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து

    சிவகங்கையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில் விவசாயி கத்தியால் குத்தப்பட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகன் ராஜகுரு (வயது 18). இவர், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயலுக்கு வந்தார். இவர்களுக்கு இடையே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த மருதுபாண்டியன் சமரசம் செய்ய முயன்றார்.

    ஆனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருதுபாண்டியனை குத்தினார். மேலும் அவரிடம் இருந்த 2 1/2 பவுன் நகையையும் பறித்துச் சென்றதாக சிவகங்கை நகர் போலீசில் மருதுபாண்டியன் புகார் கொடுத்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தேடி வருகிறார்.

    Next Story
    ×