என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் வெளிநாட்டினர் தங்கி இருந்த 3 விடுதியில் தீ விபத்து
மாமல்லபுரத்தில் வெளி நாட்டு பயணிகள் தங்கியிருந்த 3 விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடினர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள மீனவர் பகுதியில் கடற்கரையோரம் உள்ள குறைந்த கட்டண விடுதியில் தங்கி வருகிறார்கள்.
வீடு போன்ற சூழ்நிலை, வீட்டு உணவு, கூறைவீடு போன்று பார் செட்டப், எளிமையான பைக் பயணம், சைக்கிள் சுற்றுலா, சூரிய குளியல் போன்ற வசதிகள் அங்கு உள்ளதால் விரும்பி தங்குவார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு மாமல்லபுரம் மீனவர் பகுதியில் உள்ள விடுதியின் மாடியில் அடுத்த கூறை, உணவகம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
காற்றின் வேகத்தில் அருகில் உள்ள விடுதி மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியது. அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடினர்.

மொத்தம் 3 விடுதி, 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
தகவல் அறிந்ததும் கல்பாக்கம், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 3 விடுதிகளும் 2 வீடும் எரிந்து சாம்பலானது.
வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அகற்றியதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் பிரான்சு போலந்து நாட்டை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

குடிசைகளில் தீப்பற்றியதும் அங்கிருந்த வெளிநாட்டினர் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.விபத்துக் குள்ளான விடுதிகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதா? அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதா? என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள மீனவர் பகுதியில் கடற்கரையோரம் உள்ள குறைந்த கட்டண விடுதியில் தங்கி வருகிறார்கள்.
வீடு போன்ற சூழ்நிலை, வீட்டு உணவு, கூறைவீடு போன்று பார் செட்டப், எளிமையான பைக் பயணம், சைக்கிள் சுற்றுலா, சூரிய குளியல் போன்ற வசதிகள் அங்கு உள்ளதால் விரும்பி தங்குவார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு மாமல்லபுரம் மீனவர் பகுதியில் உள்ள விடுதியின் மாடியில் அடுத்த கூறை, உணவகம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
காற்றின் வேகத்தில் அருகில் உள்ள விடுதி மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியது. அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பதறியடித்து ஓடினர்.

மொத்தம் 3 விடுதி, 2 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
தகவல் அறிந்ததும் கல்பாக்கம், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 3 விடுதிகளும் 2 வீடும் எரிந்து சாம்பலானது.
வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அகற்றியதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் பிரான்சு போலந்து நாட்டை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

குடிசைகளில் தீப்பற்றியதும் அங்கிருந்த வெளிநாட்டினர் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.விபத்துக் குள்ளான விடுதிகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதா? அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதா? என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






