என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து
    X

    காரைக்குடியில் மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து

    மூதாட்டியிடம் நகை பறித்தவர்களை பிடிக்க முயன்ற வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை அய்யனார்வீதியைச் சேர்ந்த வையாபுரி மனைவி பெரியாயி அம்மாள் (வயது 67). இவர் நேற்று மதியம் அதே தெருவில் உள்ள மகன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெரியாயி அம்மாள் அணிந்திருந்த கவரிங் நகையை தங்க நகை என்று நினைத்து பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் திருடர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். திருடர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

    காயமடைந்த வாலிபர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்.

    Next Story
    ×