என் மலர்
செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்
சிவகங்கை:
மதுரையை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவரது மகள் ஹேமபிரியா (வயது 21). இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா தயாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் கல்லூரி விடுதியிலேயே தங்கி இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுதியில் இருந்து மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹேம பிரியா அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து தங்கப் பாண்டி மானாமதுரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
சிவகங்கை தாலுகா மேலச்சாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வனிதா (20). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று சிவகங்கை செல்வதாக கூறி விட்டு சென்ற வனிதா வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து வனிதாவை தேடி வருகிறார்.






