என் மலர்
செய்திகள்

நாகை அருகே தொழிலாளி தற்கொலை
நாகை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள திருமருகல் ஆண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மணிகண்டன் (26). கூலித் தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால் மனம் உடைந்த மணிகண்டன் விஷம் குடித்து விட்டார். அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
Next Story