என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் பெண்ணுக்கு கத்திக்குத்து: மருமகன் கைது
சிவகங்கையில் குடும்ப தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது குறித்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகனை கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் நிரஞ்சனாதேவி (வயது23). இவரும், திவான் (30) என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிரஞ்சனாதேவி தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று திவான் நிரஞ்சனாதேவியை குடும்பம் நடத்த அழைத்தார். அதற்கு அவர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திவான் மனைவியை கத்தியால் குத்த முயன்றார். அப்போது மாமியார் சமயமுத்து (43) தடுக்க முயன்றார். இதில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நிரஞ்சனாதேவி கொடுத்த புகாரின்பேரில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து திவானை கைது செய்தார்.
Next Story






