என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாய தொழிலாளி தற்கொலை
    X

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாய தொழிலாளி தற்கொலை

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாய தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கீழகுத்தகை பகுதியைச் சேர்ந்தவர் சக்தீஸ்வரன் (56). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அருள்மணி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்தினரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவரது மனைவி கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் மனமுடைந்த சக்தீஸ்வரன் வி‌ஷம் குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தீஸ்வரன் நேற்று இறந்து விட்டார். மனைவி அருள்மணி கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×