என் மலர்
செய்திகள்

அந்தியூர் அருகே தோட்டத்தில் படுத்திருந்த பெண்ணை கட்டிலுடன் தூக்கி வீசிய யானை
தோட்டத்தில் படுத்திருந்த பெண்ணை கட்டிலுடன் யானை தூக்கி வீசிய சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி தாளகரை அருகே உள்ள அழகாசூரை சேர்ந்தவர் மாதையன் (வயது 60) இவரது மனைவி இதயம்மாள் (55). அந்த பகுதியில் குச்சி (மரவள்ளி) கிழங்கு தோட்டத்துக்கு இரவு காவல் பணிக்காக இதயம்மாள் போய் வருவார்.
அங்கு இரவு தோட்டப் பகுதியில் உள்ள சாலை (குடிசை)யில் தங்கி ஏதாவது வன விலங்குகள் வந்தால் சத்தம் போட்டு விரட்டுவார்.
இதேபோல் நேற்று இரவும் அப்பகுதியில் உள்ள குச்சிகிழங்கு தோட்டத்துக்கு இதயம்மாள் இரவு பணிக்கு சென்றார். இரவில் அங்குள்ள ஒரு கட்டிலில் அவர் படுத்திருந்தார். நள்ளிரவில் அங்கு ஒற்றை யானை அந்த குடிசையில் புகுந்தது. குடிசையை துதிக்கையால் பிரித்து எரிந்தது.
மேலும் அங்கு படுத்திருந்த இதயம்மாளை கட்டிலுடன் தூக்கி வீசியது. இதில் அவர் கட்டிலுடன் அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.
பள்ளத்தில் அவர் விழுந்ததால் மேற்கொண்டு அந்த யானை அவரை எதுவும் செய்யாமல் அங்கிருந்து போய் விட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். சத்தம் போட்டபடி பள்ளத்தில் கிடந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில்தான் அந்த வழியாக சென்றவர்கள் இதயம்மாளை கண்டு அவரை மீட்டனர்.
பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு அவர் ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இதயம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் ரேஞ்சர் ராமராஜன், வன காப்பாளர்கள் ரகுநாதன் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதயம்மாளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி தாளகரை அருகே உள்ள அழகாசூரை சேர்ந்தவர் மாதையன் (வயது 60) இவரது மனைவி இதயம்மாள் (55). அந்த பகுதியில் குச்சி (மரவள்ளி) கிழங்கு தோட்டத்துக்கு இரவு காவல் பணிக்காக இதயம்மாள் போய் வருவார்.
அங்கு இரவு தோட்டப் பகுதியில் உள்ள சாலை (குடிசை)யில் தங்கி ஏதாவது வன விலங்குகள் வந்தால் சத்தம் போட்டு விரட்டுவார்.
இதேபோல் நேற்று இரவும் அப்பகுதியில் உள்ள குச்சிகிழங்கு தோட்டத்துக்கு இதயம்மாள் இரவு பணிக்கு சென்றார். இரவில் அங்குள்ள ஒரு கட்டிலில் அவர் படுத்திருந்தார். நள்ளிரவில் அங்கு ஒற்றை யானை அந்த குடிசையில் புகுந்தது. குடிசையை துதிக்கையால் பிரித்து எரிந்தது.
மேலும் அங்கு படுத்திருந்த இதயம்மாளை கட்டிலுடன் தூக்கி வீசியது. இதில் அவர் கட்டிலுடன் அருகே உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டார்.
பள்ளத்தில் அவர் விழுந்ததால் மேற்கொண்டு அந்த யானை அவரை எதுவும் செய்யாமல் அங்கிருந்து போய் விட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். சத்தம் போட்டபடி பள்ளத்தில் கிடந்தார். இன்று அதிகாலை 5 மணி அளவில்தான் அந்த வழியாக சென்றவர்கள் இதயம்மாளை கண்டு அவரை மீட்டனர்.
பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறகு அவர் ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இதயம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் ரேஞ்சர் ராமராஜன், வன காப்பாளர்கள் ரகுநாதன் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதயம்மாளுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
Next Story






