என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706011643069922_nambiyur-near-jewelry-shop-10-pound-gold-robbery_SECVPF.gif)
X
நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
By
மாலை மலர்1 Jun 2017 11:13 AM GMT (Updated: 1 Jun 2017 11:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நம்பியூர் அருகே நகைக்கடை கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் சரவணன் என்பவர் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிரீல் கதவுகள் திறந்திருப்பதை பார்த்து சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சரவணன் வந்து பார்த்த போது கடையின் கதவு மற்றும் கிரீல்கேட் ஆகியவற்றில் போடப்பட்டிருந்த பூட்டுகள் கல்லால் உடைக்கப்பட்டும் கதவுகளை கடப்பாரை அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு நெம்பி திறந்து நகைக்கடையின் உள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து நம்பியூர் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடையினுள் சென்று திருடு போயுள்ள பொருட்கள் குறித்து விபரம் சேகரித்தனர்.
அதில் மோதிரம், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலுசு அரணா உள்ளிட்ட சுமார் ஒருகிலோ வெள்ளிப்பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து ஈரோடு தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.
நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேட்டில் சரவணன் என்பவர் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிரீல் கதவுகள் திறந்திருப்பதை பார்த்து சரவணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சரவணன் வந்து பார்த்த போது கடையின் கதவு மற்றும் கிரீல்கேட் ஆகியவற்றில் போடப்பட்டிருந்த பூட்டுகள் கல்லால் உடைக்கப்பட்டும் கதவுகளை கடப்பாரை அல்லது இரும்பு கம்பிகள் கொண்டு நெம்பி திறந்து நகைக்கடையின் உள் நுழைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து நம்பியூர் போலீசாருக்கு சரவணன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடையினுள் சென்று திருடு போயுள்ள பொருட்கள் குறித்து விபரம் சேகரித்தனர்.
அதில் மோதிரம், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் கொலுசு அரணா உள்ளிட்ட சுமார் ஒருகிலோ வெள்ளிப்பொருட்கள் திருடுபோயிருப்பது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து ஈரோடு தடவியியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து மர்ம ஆசாமியை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)