என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நாமக்கல் அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி பலி
Byமாலை மலர்1 Jun 2017 4:15 PM IST (Updated: 1 Jun 2017 4:15 PM IST)
நாமக்கல் அருகே விபத்தில் காயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி கோமதி(47).
இவர்கள் 2 பேரும் கடந்த 28-ந்தேதி மொபட்டில் நாமக்கல் சாலையில் தீர்த்தப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென மொபட்டின் பின் பகுதியில் மோதியது. இதில் கோமதியும், நடேசனும் பலத்த காயம் அடைந்தனர்.
பின்னர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்ததான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் நடேசன் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.
இதனை தொடர்ந்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி கோமதி(47).
இவர்கள் 2 பேரும் கடந்த 28-ந்தேதி மொபட்டில் நாமக்கல் சாலையில் தீர்த்தப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென மொபட்டின் பின் பகுதியில் மோதியது. இதில் கோமதியும், நடேசனும் பலத்த காயம் அடைந்தனர்.
பின்னர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்ததான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவர் நடேசன் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.
இதனை தொடர்ந்து அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் நடேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மோகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X