search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுந்தபாடி அருகே பைக் மோதி தனியார் பள்ளி மாணவர் பலி
    X

    கவுந்தபாடி அருகே பைக் மோதி தனியார் பள்ளி மாணவர் பலி

    கவுந்தபாடி அருகே பைக் மோதி தனியார் பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தபாடி:

    கவுந்தபாடி அருகே உள்ள சலங்கபாளையம், செந்தாம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் ஈரோட்டில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக உள்ளார்.

    இவரது மகன் பூபதி (வயது 16). இவர் சித்தோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

    நேற்று இரவு 7.30 மணி அளவில் இவர் சைக்கிளில் சலங்கபாளையத்தில் இருந்து பவானி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கோபியில் இருந்து பவானி நோக்கி வெங்கட்ராமன் என்பவர் ஓட்டி வந்த பைக், பூபதி ஓட்டி வந்த சைக்கிளின் பின்புறமாக மோதியது.

    இதில் பூபதியும், வெங்கட் ராமனும் தூக்கி வீசப்பட்டனர். பூபதி சம்பவ இடத்திலேயே பலியானார். வெங்கட்ராமன் காயம் அடைந்தார்.

    வெங்கட்ராமன் பவானியில் உள்ள ஆட்டோ மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவர் கோபியில் இருந்து பவானி நோக்கி புதிய பைக் எடுத்து வரும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

    இது குறித்து கவுந்தபாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×