என் மலர்
செய்திகள்

பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்.
மதவாத கட்சிகளுடன் ரஜினிகாந்த் கூட்டணி சேரக்கூடாது: திருமாவளவன்
ரஜினி காந்த் கட்சி தொடங்கினால் சாதி மற்றும் மதவாத கட்சிகளோடு சேராமல் இருக்க வேண்டும் என காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம்:
டாக்டர் அம்பேத்காரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். இது ஜனநாயக நாடு. ஜனநாயக உரிமை அவருக்கு உள்ளது. அவர் கட்சி தொடங்கினால் சாதி மற்றும் மதவாத கட்சிகளோடு சேராமல் இருக்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் நிபந்தனை.
ரஜினிகாந்த் என்னை தலித் மக்களுக்காக பாடுபடுகிறேன் என்று கூறியதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஒரு சாதிக்காக மட்டும் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்காக நான் பாடுபட்டு வருகிறேன் என்பதை நண்பர் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கோடை கால விடுமுறையில் அனைத்து கட்சி தலைவர்களும் குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால் நான் மட்டும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மக்களை நேரடியாக சந்தித்து வருகிறேன்.
எனது தாய் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் தினமும் கண்ணீர் வடித்து வருகிறார். திருமணம் செய்து கொள் என்று கூறி வருகிறார். ஆனால், நான் என் வாழ்வை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து வருகிறேன். நான் வெற்றியை கொண்டாடியதும் இல்லை. தோல்வியை கண்டு துவண்டு விடவும் இல்லை. மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
ஒரு இயக்கம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அப்படி விடுதலை சிறுத்தை கட்சி கட்டுப்பாடுடன் இருக்கிறது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த போது தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். நான் மட்டும் உண்ணாவிரதம் இருந்தேன். இதை விடுதலை சிறுத்தை கட்சியினரும் பின்பற்றினார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் அம்பேத்காரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம். இது ஜனநாயக நாடு. ஜனநாயக உரிமை அவருக்கு உள்ளது. அவர் கட்சி தொடங்கினால் சாதி மற்றும் மதவாத கட்சிகளோடு சேராமல் இருக்க வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தை கட்சியின் நிபந்தனை.
ரஜினிகாந்த் என்னை தலித் மக்களுக்காக பாடுபடுகிறேன் என்று கூறியதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஒரு சாதிக்காக மட்டும் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி இல்லை. அனைத்து தரப்பு மக்களுக்காக நான் பாடுபட்டு வருகிறேன் என்பதை நண்பர் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கோடை கால விடுமுறையில் அனைத்து கட்சி தலைவர்களும் குடும்பத்துடன் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால் நான் மட்டும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மக்களை நேரடியாக சந்தித்து வருகிறேன்.
எனது தாய் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் தினமும் கண்ணீர் வடித்து வருகிறார். திருமணம் செய்து கொள் என்று கூறி வருகிறார். ஆனால், நான் என் வாழ்வை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து வருகிறேன். நான் வெற்றியை கொண்டாடியதும் இல்லை. தோல்வியை கண்டு துவண்டு விடவும் இல்லை. மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
ஒரு இயக்கம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அப்படி விடுதலை சிறுத்தை கட்சி கட்டுப்பாடுடன் இருக்கிறது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இனப்படுகொலை நடந்த போது தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். நான் மட்டும் உண்ணாவிரதம் இருந்தேன். இதை விடுதலை சிறுத்தை கட்சியினரும் பின்பற்றினார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






