என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் வீடு-மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சிற்பகலைஞர்
மாமல்லபுரத்தில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த சிற்பகலைஞ்சரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் ஜந்துரதம் சாலையில் சிற்ப பட்டறையும் கலைக்கூடமும் நடத்தி வருபவர் விஜி. இவர் நேற்று காலை தனது கடை முன் நடனம் ஆடியபடி போவோர் வருவோரை கிண்டலடித்தபடி இருந்தார் திடீரென கடையில் இருந்த விலை உயர்ந்த சிற்பங்களை ரோட்டில் போட்டு உடைத்து மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினார்.
வீட்டின் உள்ளே சென்று வீட்டு உபயோகப் பொருட்களையும் உடைத்த அவர் தான் வளர்த்த நாயையும் தரையில் அடித்து கொன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜியை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனது கற்பனையில் உருவான சிற்பங்களை பேஸ்புக்கில் அவர்களது சிற்பங்கள் என பதிவு செய்திருந்ததாலும் ஆத்திரத்தில் இப்படி நடந்து விட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வீடு திரும்பினார்
பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு தனது பைக்கையும் வீட்டின் கூரையையும் தீயிட்டு கொழுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாமல்லபுரம் ஜந்துரதம் சாலையில் சிற்ப பட்டறையும் கலைக்கூடமும் நடத்தி வருபவர் விஜி. இவர் நேற்று காலை தனது கடை முன் நடனம் ஆடியபடி போவோர் வருவோரை கிண்டலடித்தபடி இருந்தார் திடீரென கடையில் இருந்த விலை உயர்ந்த சிற்பங்களை ரோட்டில் போட்டு உடைத்து மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினார்.
வீட்டின் உள்ளே சென்று வீட்டு உபயோகப் பொருட்களையும் உடைத்த அவர் தான் வளர்த்த நாயையும் தரையில் அடித்து கொன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜியை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் வெளிநாட்டு நண்பர்கள் சிலர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தனது கற்பனையில் உருவான சிற்பங்களை பேஸ்புக்கில் அவர்களது சிற்பங்கள் என பதிவு செய்திருந்ததாலும் ஆத்திரத்தில் இப்படி நடந்து விட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வீடு திரும்பினார்
பின்னர் நேற்று இரவு 10 மணிக்கு தனது பைக்கையும் வீட்டின் கூரையையும் தீயிட்டு கொழுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Next Story






