என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே பட்டதாரி பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    காரைக்குடி அருகே பட்டதாரி பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

    காரைக்குடி அருகே பட்டதாரி பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள புதுவயல் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பிரபா (வயது 32), எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக பிரபாவை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரபா, பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×