search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே 1000 வாழைகள்- அவரை பயிர்களை சேதப்படுத்திய  யானை, மான்கள் கூட்டம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே 1000 வாழைகள்- அவரை பயிர்களை சேதப்படுத்திய யானை, மான்கள் கூட்டம்

    • இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்ப டுத்தியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு அடுத்துள்ளது ஆதிமதையனூர் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த கிராமம் அடர்ந்த வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

    கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதியில் 8 காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவை அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஆதிமதையனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யாசாமி, செந்தில்குமார், ஸ்ரீதர், சுலோச்சனா. இவர்கள் அந்த பகுதியில் உள்ள தங்கள் விளைநிலங்களில் வாழை பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு காட்டு யானைகள் கூட்டம் இந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடப்பட்டிருந்த 1000த்திற்கும் மேற்பட்ட வாழை பயிர்களை தின்றும், பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார், ராமசாமி, கிருஷ்ணசாமி, தம்பு, ராஜேந்திரன் ஆகியோரின் விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அவரை மொச்சை பயிர்களை மான்கள் கூட்டம் சேதப்ப டுத்தியது.

    இதனால் விவசாயி களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் சேதம் அடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×