search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    பா.ஜனதாவை வேரோடு அகற்றி தமிழக உரிமையை மீட்க வேண்டும் - ஈரோட்டில் கே.எஸ்.அழகிரி பிரசாரம்

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் மன்மோகன்சிங் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி விலைவாசியை குறைப்பார் என கேஎஸ் அழகிரி பிரசாரம் செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திருமகன் ஈவெராவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மரப்பாலம் நால் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர்.விலைவாசியை குறைத்து காட்டுவோம் என்று. அப்போது பெட்ரோல் ரூ.100 விற்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ.70-க்கு விற்றது. சிலிண்டர் ரூ.900-க்கு விற்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ.442-க்கு விற்றது.

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் 108 டாலராக இருந்த போது நாங்கள் பெட்ரோல் விலை ரூ70- க்கு விற்றோம். ஆனால் தற்போது 54 டாலராக உள்ளது. அப்படி என்றால் அவர்கள் ரூ.35-க்கு பெட்ரோல் விற்க வேண்டும். ஆனால் ரூ.100-க்கு விற்கிறார்கள். அவர்கள் சிலிண்டர் விலையை ரூ.200-க்கு விற்க வேண்டும். ஆனால் 900 ரூபாய்க்கு விற்கிறார்கள். எனவேதான் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் விலை வாசியைக் குறைப்போம் என்று உறுதி கூறி உள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் மன்மோகன்சிங் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி விலைவாசியை குறைப்பார். அதுமட்டுமில்லாது காய்கறி மளிகை துணிமணிகள் விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு 2 முக்கிய காரணம். ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு. இந்த இரண்டையும் மாற்றி அமைப்போம்.

    பிரதமர் மோடி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது தி.மு.க-காங்கிரஸ் பெண்களை மதிப்பதில்லை நாங்கள் தான் மதிக்கிறோம் என்று பேசினார். மோடி. நான் பல்வேறு தலைவர்கள் பிரதமர் பேச்சை கேட்டு உள்ளேன். நாட்டின் வளர்ச்சி பற்றியும் விவசாயம் பற்றியும் நீர்வளம் பற்றிதான் பேசுவார்கள். ஆனால் உள்ளூர் பிரச்சினை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் மோடி தான் இப்படி பேசி உள்ளார்.

    பிரதமர் மோடி

    உலக அளவில் 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பொதுவுடமைக் கட்சி முதல் கட்சியாக உள்ளது. நாங்கள் 2 முறை பெண்களை தலைவராக்கி அழகு பார்த்தோம். இந்திரா காந்தி, சோனியா காந்தியை தேசிய தலைவராக்கி அழகு பார்த்தோம். நான் மோடியைப் பார்த்து கேட்கிறேன், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஒரு முறையாவது பெண்களை அகில இந்திய தலைவர் ஆகி உள்ளீர்களா? ஓட்டுக்காக தவறான தகவலை சொல்லி வருகிறார்.

    இந்த தேர்தலில் நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும். 26 லட்சம் பேர் பேசும் சமஸ்க்ருத மொழிக்காக மத்திய அரசு 640 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்காக மத்திய அரசு வெறும் 7 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளது.. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சாரப் படையெடுப்பை செய்து வருகிறது. மோடி ஒரே மொழி ஒரே கலாச்சாரம் பண்பாடு என்கிறார். அதை முதல்வர், துணை முதல்வர் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.

    இந்தியாவில் ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் மொழி கலாச்சாரம் வேறுபடும். ஆர்.எஸ்.எஸ். மாடுகளைத் உண்பவர்களை அடித்துக் கொள்ளுங்கள் என்கிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு கொடுமைகள் நடந்தது. எனவே பாரதீய ஜனதாவை வேரோடு அகற்ற வேண்டும். தமிழக உரிமையை மீட்க வேண்டும்.

    பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. உண்மையான சிஷியனாக உள்ளது. ஒவ்வொருத்தரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். அவர்கள் முககவசத்தை கழட்டினால் அவர்கள் முகம்தான் தெரியும். ஆனால் முதல்வர், துணை முதல்வர் முககவசத்தை கழட்டினால் மோடி உருவாகும் தான் தெரியும். மோடி முகமாக செயல்பாடாக அ.தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது மாநில உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை. லேடியா மோடியா என்று பேசியவர். அ.தி.மு.க. ஊழல் கரை படிந்த கட்சியாகும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×