என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தின் முன்னேற்றம் தான் அதிமுக கூட்டணியின் இலக்கு- அன்புமணி பிரசாரம்
Byமாலை மலர்24 March 2021 7:51 AM GMT (Updated: 24 March 2021 7:51 AM GMT)
நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
‘‘சமூக நீதி அடிப்படையில் நமது கூட்டணி இருக்கிறது. நமது 40 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் மறக்கக் கூடாது.
வன்னியர்களை போன்று இன்னும் பல சமுதாயத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும். பா.ம.க., புரட்சி பாரதம் கட்சியின் கொள்கையும் சமூக நீதிதான்.
நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம். அதற்கு ஒரு படி தான் இந்த கூட்டணி. இது பலமான கூட்டணி.
இந்த ஆட்சி பெண்களுக்கு அமைதி தரும் ஆட்சி. கொரோனா காலத்தில் 10 மாதங்களாக நான் உங்களை பார்க்க முடியவில்லை. இப்போது வந்திருக்கிறேன். நானும் உங்களோடு துள்ளிக்குதிக்க ஆசையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியை ஆதரித்து, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
‘‘சமூக நீதி அடிப்படையில் நமது கூட்டணி இருக்கிறது. நமது 40 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தவர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதை நாம் மறக்கக் கூடாது.
வன்னியர்களை போன்று இன்னும் பல சமுதாயத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் தனித்தனியாக இட ஒதுக்கீடு பெற்றுத்தர வேண்டும். பா.ம.க., புரட்சி பாரதம் கட்சியின் கொள்கையும் சமூக நீதிதான்.
நாம் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுக்கு வரவேண்டும். நம்முடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றம். அதை நாம் அடைவோம். அதற்கு ஒரு படி தான் இந்த கூட்டணி. இது பலமான கூட்டணி.
இந்த ஆட்சி பெண்களுக்கு அமைதி தரும் ஆட்சி. கொரோனா காலத்தில் 10 மாதங்களாக நான் உங்களை பார்க்க முடியவில்லை. இப்போது வந்திருக்கிறேன். நானும் உங்களோடு துள்ளிக்குதிக்க ஆசையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X